posted 13th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- தமிழையும், சேதுவையும் வதைத்தது பிரகாஷின் வார்த்தைகள்
- உண்மையினை வெல்ல வைக்க பின் போகாத தமிழின் உரத்த மனமும், திடமும்
- ஜனாம்மாவின் வார்த்தைகள் இதுவரை பிழைக்கவில்லைதான், ஆனால், இன்று.... ஏதுக்கோ அடிசறுக்குமாம் என்பது இதுதானா?
- நேர்மையான வாழ்க்கை, நிதானமான தொழில், வாழ வைக்கும் தியாக மனம், கடவுளின் அனுக்கிரகம் இப்படி பலவற்றிற்குச் சொந்தக் காறியாக அடிமட்டத்திலிருந்து நிமிர்ந்து நிற்கும் ஜனாம்மாவின் சாம்றாஜத்தினை உருக்குலைக்க அந்தத் தெய்வம் முதலில் ஒத்துக் கொள்ளுமா?
- வஞ்சகமில்லாமல் மனதினைப் பறி கொடுத்தவள் வர்ஷனி. அவளின் அந்த தூய மனதிற்கு ஏமாற்றமான வாழ்க்கையா வரும்?
Varisu - வாரிசு - 10.06.2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
பெரிய பணக்கார வீட்டையே திட்டமிட்டு கொள்ளையடிக்க உள்ள பிரபுவின் குடும்பம் எத்தனை வருட காலமாக plan பண்ணி இருப்பார்கள். அது மட்டுமல்லாமல், இப்போது இருக்கும் இடத்தினிலே அவர்கள் வந்து சீவிப்பதற்கான காலத்தினை எல்லாம் கணக்குப் போட்டு, அங்கு வாழும் மக்கள் எல்லாரையும் ஒரே வகையில் மூழைச் சலவை செய்து, அனைவரையும் பணத்தினைக் கொடுத்தும் அல்லது உயிர் பயத்தினைக் காட்டியும் வெருட்டிக் காரியம் சாதிப்பதற்கு ஒரு சில மாதங்களாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை.
இங்கு தமிழ் விடும் பிழை என்னவென்றால், தான் எடுத்த போட்டோ, வீடியோக்களெல்லாம் ஆதாரங்களாக அமையும் என்பதுதான். அவற்றினை எல்லாம் ஒரு சில நொடிகளில் சுக்கு நூறாக்கியது பிரபுவின் திட்டங்கள்.
ஒன்று, தமிழும், சேதுவும் தன்னைப் பின் தொடர்ந்து வருகின்றார்கள் என்று பிரபுவிற்குத் தெரிந்து இவற்றினைச் செய்தானா? அல்லது தான் பிடிபடக் கூடாது என்று வினாடிக்கு வினாடி கவனமாக இருக்கின்றானா என்று ஒரு சிலவற்றினை ஊகிக்க வேண்டியுள்ளது.
ஆனால், இப்படியாக நிதானமாகக் காயினை நகர்த்தும் பிரபு தனது பேர்சினை கோட்டை விட்டு விட்டானே!
தமிழ், சேதுவையும், மாமனார் பிரகாஷையும் கூட்டுச் சேர்த்து சாட்சிகளாக வைத்து தனது ஆதாரங்களைக் காட்டுகையில், இவர்கள் யார் என்று கூட ஒருவரும் கேட்காமல், என்ன விஷயத்திற்கு இவர்கள் வந்துள்ளார்கள் என்றுகூட ஆராயாமல், அனைவரும் கூட்டாகச் சேர்ந்து சொல்லி வைத்ததினை அப்படியே ஒப்புவித்ததனை ஒருவரும் கண்டு பிடிக்கவில்லை.
இதேபோலத்தான், சிபீயும், பிரபுவைப்பற்றி விசாரிக்கையில், இதே வசனம்தான் அனைவராலும் சொல்லப்பட்டதனை இங்கு நினைத்துப் பார்க்க இடமுண்டு.
இப்படியாக தமிழ் எடுத்த முயற்சியானது தகடு பொடியானது வருத்தமில்லை தமிழுக்கு, மாறாக, அவளின் மாமனார் பிரகாஷ் கூறியதுதான் தமிழுக்கும், சேதுவுக்கும் வலித்தது.
பிரகாஷோ தனது மகளின் விருப்பம்தான் எங்களது, அவளின் விருப்பத்தினைத் தாண்டி தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கணேஷனுக்கு மாப்பிள்ளை அழைக்கப் போகையிலே ஆறுதல் சொன்னாலும், கணேஷனிடம் சொல்லி மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கணேஷன் ஒரு நல்லவனா? தன்னையே விபத்திற்குள்ளாக்கி 20 வருடங்களாக படுத்த படுக்கையிலே வைத்தவன் அவ்வளவு நல்லவனா என்று பிரகாஷிற்குத் தெரியாதா என்ன?
அது மட்டுமல்லாமல், பிரபு, தனது வருங்கால மாமனாரிடம், அவரின் உடல் நலத்தினைப் பற்றி ஆர்வமாக விசாரித்து வருகையிலேதான் கணேஷனினதும், குறிஞ்சியினதும் ஆட்டம் தொடங்கியது.
பிரபு அந்த நடுநிசியில் ஒரு பையனை அடித்து வெருட்டியதைப் பாரத்த தமிழ், அவனில் ஏற்பட்டுள்ள ஐமிச்சமானது தொடர்ந்து அவளின் மனதில் சந்தேகத்தினை ஊன்றி வைத்துள்ளதே ஒழிய அது அவளை விட்டு அகலவில்லை.
பிரகாஷ் மாமா பேசியதனை வைத்து தமிழ் பின் வாங்கி விடுவாளோ என்று சேது நினைத்ததனை தமிழ் உறுதியாக மறுத்துவிட்டாள். அப்போது தமிழின் முயற்சிக்கு உரம் போடுவதுபோல ஒரு அநாமதேய போன் கோளானது தமிழுக்கு வந்தது. தமிழ் போகும் பாதை சரியானதே என்றும், எல்லாம நாளைக்குத் தெரியும் என்றும் கூறியது. அதே சமயம் சேதுவுக்கும் போனில் ஒரு குறுஞ் செய்தி வந்தது. இந்த கோளும், குறுஞ் செய்தியும் சேதுவின் Private detectiveவிடம் இருந்து வந்திலுக்கலாம் என்பது இவர்கள் இருவரின் ஊகம்.
நாளைக்கு நிட்சயதார்த்தம்.
- எல்லாம் நன்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது,
- அம்மாவின் முடிவு ஒருகாலும் தப்பாகாது, அதனால்தான் தான் இந்தக் கல்யாணத்திற்கு சரி சொன்னனான் என்பது பிரகாஷின் கூற்றாகின்றது,
- தமிழும் ஜனாம்மா மாதிரி ஒருவரையும் நம்பாமல் இருக்கின்றாளே,
- தகரத்தினைத் தங்கமாக ஒப்பனை செய்யும் பிரகாஷ், தமிழின் மேலேயும் அவளின் கணிப்பின் மேலேயும் குற்றங்கண்ட பிரகாஷ்
- நாளை விடிகையிலே, தமிழுக்கு வந்த அந்த அநாமதேயக் கோளும், சேதுவுக்கு வந்த குறுஞ் செய்தியின் முடிவும், அவற்றின் வலிமையும்.
- தமிழுக்கு பொலிஸில் இருக்கும் செல்வாக்கையும், மதிப்பையும் வைத்து, தமிழிடம் அகப்பட்ட பிரபுவின் பேர்சினுள் உள்ள ஆதாரங்களை பரிசீலனை பண்ணும் படியாக தமிழ் இன்னொரு பக்கமாக ஆராய மாட்டாளா?
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!